2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

வெள்ளத்தினால் 2 இலட்சம் ஏக்கர் நெல் வயல்கள் முற்றாக சேதம்

Super User   / 2011 ஜனவரி 25 , பி.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கெலும் பண்டார)

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் 200,000 ஏக்கர் நெல் வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்நிலங்களில் விவசாயம் செய்வதற்காக மாத்திரம்  விதைகள் மற்றும் பசளைகள் இலவசமாக வழங்கப்படவுள்ளதாகவும் விவசாய சேவைகள் ஆணையாளர் ரவீந்திர ஹேவாவிதாரன தெரிவித்தார்.

இந்த வெள்ளத்தினால் 400,000 ஏக்கர் வயல்கள் நீரில் முழ்கிய போதிலும் 200,000 ஏக்கர் முற்றாக சேதமடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் மொத்த நெல் உற்பத்தியில் 10 சதவீதமானவையே பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இது தாங்க முடியாத ஒரு இழப்பல்ல. எனினும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அதிக வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் ரவீந்திர ஹேவாவிதாரன மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X