2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உள்ளாடைகளுக்குள் மாணிக்க கற்கள்

Menaka Mookandi   / 2010 நவம்பர் 14 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளாடைகளுக்குள் மறைத்த நிலையில் நாட்டுக்குள் மாணிக்கக் கற்களை கடத்தி வந்த பேருவளை பிரதேச வர்த்தகரொருவரை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தள்ளனர்.

சுமார் 8 இலட்சம் ரூபா பெறுமதியான மேற்படி மாணிக்கக் கற்களை தனது உள்ளாடைகளிலும் பயணப் பொதியிலும் மறைத்து வைத்திருந்த நிலையிலேயே அவர் அவற்றைக் கடத்தி வந்தள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கட்டுநாயக்கா பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்று சுங்கத் திணைக்களம் தெரிவிக்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .