2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.நா இணைப்பாளருக்கான பதில் கடிதம் இடைநிறுத்தம்:வெளிநாட்டமைச்சு தகவல்

Super User   / 2009 டிசெம்பர் 24 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய நாடுகளின் இணைப்பாளர் பிலிப் அல்ஸ்டனிற்கு, அனர்த்த முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர்  பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க அனுப்பிவைத்துள்ள பதில் கடிதம் நிறுத்தப்பட்டிருப்பதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

பேராசிரியர் ரஜீவ விஜேசிங்கவினால் அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தை நிறுத்திவைக்குமாறு ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட நிலையத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு வெளிநாட்டு அமைச்சு குறிப்பிட்டது.

அத்துடன் குறித்த கடிதம் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதை ஜெனீவாவிலுள்ள நிரந்தர நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.

பிலிப் அல்ஸ்டனிற்கு பதில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்திருந்தார்.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது விடுதலைப் புலிகள் அமைப்பின் 3 சிரேஷ்ட தலைவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பது தொடர்பில் விளக்கமளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐக்கிய நாடுகள் சபை கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X