2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மஹிந்த ராஜபக்ஸவுடனான பகிரங்க விவாதத்திற்கு சரத் பொன்சேகா தயார்

Super User   / 2009 டிசெம்பர் 29 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடனான பகிரங்க விவாதத்திற்கு முகம்கொடுக்க எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்  பொன்சேகா தயாராகியுள்ளார்.

ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே எதிர்க்கட்சி கூட்டணிகளின் ஊடக இணைப்பாளர் அநுரகுமார திஸ்ஸாநாயக்க இதனைக் கூறினார்.

சரத் பொன்சேகாவின் மருமகன் ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உட்பட்டதான விவாதத்திற்கு தயாரெனவும் அவர் கூறினார்.

இதேவேளை, ஜனாதிபதியுடனான    பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்ச நேற்று அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .