2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சரத் பொன்சேகாவை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி சவால்

Super User   / 2010 ஜனவரி 03 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்க்கட்சி கூட்டணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா மீது சுமத்தப்பட்டிருக்கும் ஆயுதக் கொள்வனவுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் அவரை நீதிமன்றத்திற்கு அழைக்குமாறு எதிர்க்கட்சி சவால் விடுத்துள்ளது.

ஊடகவியலாளர்களுக்கு இன்று கருத்துத் தெரிவிக்கையிலேயே ஜே.வி.யின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் இந்த சவாலை விடுத்தார்.

ஆயுதக் கொள்வனவு தொடர்பான குற்றச்சாட்டுத் தொடர்பில் அரசாங்கத்துடனான விவாதத்திற்கு சரத் பொன்சேகா தயாராகியிருப்பதாகவும் விஜித்த ஹேரத் குறிப்பிட்டார்.

இதேவேளை, ஆயுதக் கொள்வனவுக் குற்றச்சாட்டுத் தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணித் தலைவர் விமல் வீரவன்சவுடனான நேரடி தொலைக்காட்சி விவாதத்திற்கு வருமாறு சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .