2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஆயுதப் பாவனை தொடர்பில்அரசாங்கம் ஐ.நாவிற்கு போலியான தகவல்;மங்கள சமரவீர

Super User   / 2010 ஜனவரி 17 , மு.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட யுத்தத்தில்  கனரக ஆயுதப் பாவனை தொடர்பில் இலங்கை அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபைக்கு போலியான தகவல்களை வழங்கியிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார்.

டெய்லிமிரர் இணையத்தளத்திற்கு வழங்கியிருக்கும் பேட்டியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இந்திய அரசாங்கத்துடன் ஏற்படுத்தப்பட்டிருந்த   அரசியல் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே, கனரக ஆயுதப் பாவனை நிறுத்தப்பட்டதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க கூறியதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து கனரக ஆயுதப் பாவனை நிறுத்தப்படுமென இலங்கை அரசாங்கம் உறுதியளித்திருந்ததாகவும் அவர் கூறினார். இந்த நிலையிலேயே, இந்திய தேர்தல் சிறந்த முறையில் நடைபெற்றதாகவும்  மங்கள சமரவீர  தெரிவித்தார்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X