2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

பிள்ளையானின் கட்சி இணக்கப்பாடின்றி முடிவு

Super User   / 2010 பெப்ரவரி 07 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்து போட்டியிடுவதா என்பது தொடர்பில் நேற்று நடைபெற்ற தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் கூட்டத்தில் இணக்கப்பாடு எட்டப்படாத நிலையில் முடிவடைந்துள்ளது.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர், கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நேற்று இதற்கான கூட்டம் நடைபெற்றது.

இது தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும், இதன் பின்னரே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .