2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தென்பகுதியில் பஸ் விபத்து

Super User   / 2010 பெப்ரவரி 11 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்பகுதியிலுள்ள ஒக்கந்த இரத்கம பிரதேசத்தில்   இன்று காலை  இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், இந்த விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி  வந்த பஸ்ஸும், அல்பிட்டிய பகுயிலிருந்து காலி நோக்கி வந்த பஸ்ஸும் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்களில் 4 மாணவர்கள் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் பிரஷாந்த ஜயக்கொடி டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு கூறினார்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .