2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொலைக் குற்றச்சாட்டுக்குள்ளான மருத்துவர் விளக்கமறியலில்

Super User   / 2010 ஜூலை 14 , பி.ப. 02:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் மருத்துவ தாதியை வல்லுறவுக்குட்படுத்தி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் வைத்தியரை பொலிஸார் கைது செய்து ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.

இந்த வைத்தியரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டார்.

வேலனை வைத்தியசாலையின் பொறுப்பாளரான வைத்தியர் பிரியந்த செனவிரத்ன கடந்தச் சனிக்கிழமை மருத்துவ தாதியை கொலை செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

மருத்துவ தாதியின் கொலையை கண்டித்தும், சந்தேக நபரான வைத்தியரை கைது செய்யும்படியும் கோரி யாழ்ப்பாணத்தில் சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .