2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும்-அமைச்சர் கெஹலிய

Suganthini Ratnam   / 2010 ஜூலை 15 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கெலும் பண்டார, மதுஷிகா குணவர்தன)

பாதுகாப்பை பேணும் முகமாக நாட்டின் முக்கிய இடங்களில் உயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்ந்து இருக்கும் என ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முக்கிய பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயங்களை அமைப்பதற்கு அரசாங்க காணிகள் இல்லாவிட்டால் தனியார் காணிகளை அரசாங்கம் பயன்படுத்தும் எனவும் இன்று வியாழக்கிழமை அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் கூறினார்.

உயர் பாதுகாப்பு வலயப் பகுதிகள் என பிரகடனப்படுத்தப்பட்டதால் தமது காணிகளுக்கு செல்ல முடியாதிருப்பதாக குறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைக் கூறினார்.

"தென்கொரியாவில் அமெரிக்கா உயர் பாதுகாப்பு வலயமொன்றை பேணுகிறது. அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். ஆனாலும் அமெரிக்கா அவ் உயர் பாதுகாப்பு வலயத்தை பேணுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

காணி உரிமைகள் நிராகரிக்கப்படுவது மற்றுமொரு யுத்தத்திற்கு வழிவகுக்குமா எனக் கேட்டபோது, "மக்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து சமமான உரிமைகள் வழங்கப்பட்டால் அவர்கள் அரசாங்கத்திற்கு எதிராக திரும்பமாட்டார்கள்" என அமைச்சர் பதிலளித்தார்.








You May Also Like

  Comments - 0

  • Senthilan, C. Friday, 16 July 2010 01:14 AM

    அமைச்சரின் பதில், வட்டுக்கோட்டைக்கு வழி எது என்று கேட்டால் துட்டுக்கு இரண்டு கொட்டை பாக்கு என்று சொல்வதுபோல் இருக்கிறது. எதையோ சொல்லிவிட்டால் போதுமானது என்கிற கலாச்சாரம் முதலில் ஒழியவேண்டும். தமது நாடு என்று ஒருவர் சொல்ல முன்பு தனது வீடு, தனது காணி என்று உரிமை பாராட்டக்கூடிய தன்மை இருக்கவேண்டும். என்னே உலகம்!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .