2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தர்ஷிகா மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிணையில் விடுதலை

Super User   / 2010 ஜூலை 16 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

வேலணை வைத்தியசாலையில் பணியாற்றிய குடும்பநல மருத்துவ உத்தியோகத்தர் சரவணை தர்ஷிகாவின் மரணம் தொடர்பான சந்தேக நபரான மருத்துவர் பிரியந்த செனவிரட்ண யாழ் மேல் நீதிமன்றத்தால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தலா ஒரு லட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுளார். அவரை பிணையில் விடுவிப்பதற்கு அரச சட்டத்தரணி ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.

மேற்படி மருத்துவரை கைது செய்யுமாறு நூற்றுக்கணக்கான மருத்துவ ஊழியர்கள் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .