2024 மார்ச் 28, வியாழக்கிழமை

மீண்டும் இலங்கை வருகிறார் நீல் புஹ்னே

A.P.Mathan   / 2010 ஜூலை 17 , மு.ப. 03:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்காக ஐ.நா.வின் வதிவிடப் பிரதிநிதியும் மனிதத்துவ இணைப்பாளருமான நீல் புஹ்னே கடந்தவாரம் நியூயோர்க்கிற்கு திருப்பி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனின் விஷேட செய்தியுடன் இலங்கைக்கு மீண்டும் திரும்பவுள்ளதாக ஐ.நா.சபையின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கிறார்.

ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கி மூனுக்கு இலங்கை நிலைவரம் பற்றியும் இலங்கையிலுள்ள ஐ.நா. அலுவலர்களின் நிலைமை பற்றியும் நீல் புஹ்னே எடுத்துக்கூறியிருக்கிறார். 2009ஆம் ஆண்டு ஐ.நா. சபையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றியும் கலந்தாலோசித்திருக்கிறார்கள்.

திருப்பியழைக்கப்பட்ட நீல் புஹ்னே எதற்காக மீண்டும் இலங்கைக்கு செல்கிறார் என பேச்சாளரிடம் கேட்டபோது… இலங்கையில் இப்பொழுது அரசாங்கத்தின் சாதகமானநிலை தென்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இலங்கையிலுள்ள ஐ.நா. பணியாளர்கள் எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் பணிபுரிகிறார்கள். இதனைக் கருத்திற்கொண்டே புஹ்னே மீண்டும் இலங்கை செல்லவுள்ளார் என்று குறிப்பிட்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X