2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் பொலிஸாரால் தடுப்பு

Super User   / 2010 ஜூலை 05 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று நண்பகல் மட்டக்குளி அசம்பாவிதம் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான்  நீதிமன்றத்திற்கு செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை கொழும்பு குற்றப்புலனாய்வு பிரிவை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் என நம்பப்படுபவர்கள் உள்ளே செல்லவிடாமல் தடுத்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு உடகவியலாளர்கள் வினவிய போது, இது தொடர்பில் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்கள் வினவிய போது, நீதிமன்றங்களில் முக்கிய விசாரணைகள் இடம்பெறும் போது ஊடகவியளார்களை அனுமதிப்பதில்லை என்ற காரணத்தினாலேயே இன்று அனுமதிக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

கடந்த வார இறுதியில் மட்டக்குளி பகுதியில் இடம்பெற்ற அசம்பாவிதம் தொடர்பில் குறைந்த பட்சம் 185 சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் இவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .