2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

டெங்கு ஒழிப்புக்கு பீ.டி.ஐ. பக்றீரியா அடுத்தமாதம் இறக்குமதியாகும்

Super User   / 2010 ஜூலை 06 , பி.ப. 04:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சந்துன் ஏ. ஜயசேகர)

 டெங்கு அதிகரிப்பை கட்டுப்படுத்தகூடிய பஸிலஸ் துரென்ஜினிஸ் இஸ்ரேலினிஸ் (பீ.டி.ஐ) எனும் பக்றீரியாவை கியூபாவிலிருந்து சுகாதார அமைச்சு இறக்குமதி செய்யவுள்ளது.

திரவ நிலையிலுள்ள இந்த பக்றீரியாவில் 10,000 லீற்றர் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் இதன் முதற் தொகுதி எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் என எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக கண்டி, கம்பளை, அக்குரணை பகுதிகளில் இதனைப் பயன்படுத்தவுள்ளோம். இதன் வினைத்திறனையும் டெங்கு நோய் பரவல் பிரச்சினைக்கான உயிரியல் ரீதியான தீர்வாக இந்த பக்றீரியாவை பயன்படுத்தமுடியுமா என்பது குறித்தும் நாம் ஆராயவுள்ளோம் என மலேரியா ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் ரவிந்திர அபேசிங்க தெரிவித்தார்.

இதற்கு முன் டெங்கு ஒழப்புக்கு பல்வேறு முறைகளைக் கையாண்ட போதிலும்  அது அதிகளவு பயனளிக்கவில்லை.  இந்நிலையில் எதிர்காலத்தில் பீ.டி.ஐ.யை பாரிய அளவில் சுகாதார அமைச்சு பயன்படுத்தவுள்ளது.

10,000 லீற்றர் பீ.டி.ஐ.யின் பெறுமதி 2 இலட்சம் யூரோ (சுமார் 28 மில்லியன் ரூபா) எனவும் விவசாயத்துறை அமைச்சின் அங்கிகாரம் கிடைப்பதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக இதை இறக்குமதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நாடளாவிய ரீதியில் 18,843 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 132 பேர் நேற்று வரை உயிரிழந்துள்ளதாகவும் அரச தொற்று நோய் பிரிவு தெரிவிக்கின்றது. மேலும் டெங்கு நோயால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக கொழும்பு (2,605 நோயாளர்கள்), கம்பஹா (2,254), யாழ்ப்பாணம் (2,308), இரத்தினபுரி (1,405), மட்டக்களப்பு (1,070), களுத்துறை ( 938), கண்டி (850) ஆகியன அடையாளம் காணப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .