2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

வானில் ஓர் அதிசயம்...!

A.P.Mathan   / 2010 ஜூலை 07 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்த நூற்றாண்டில் இதுவரை நடந்திராத ஒரு வானியல் அதிசயம் நாளை இரவு நடக்கவுள்ளது.

டெல்டா ஒபிஹூயுச்சி என்ற நட்சத்திரத்தை ரோமா என்ற 50 கி.மீ. விட்டம் கொண்ட ஒரு எரிகல் கடக்கவுள்ளதை பூமியிலிருந்து பார்க்க முடியும். அப்போது நடசத்திரத்தை அந்த எரிகல் மறைக்கவுள்ளதால், நட்சத்திர கிரகணம் ஏற்படவுள்ளது.

இந்த நூற்றாண்டில் இதுவரை பூமியிலிருந்து பார்க்கும் வகையிலான நட்சத்திர கிரகணம் நடந்ததேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நள்ளிரவில் சில நொடிகளே நீடிக்கப் போகும் இந்த வானியல் சம்பவத்தை மத்திய ஐரோப்பா, ஸ்பெயின், கனாரி தீவுகள் உள்ளிட்ட பூமியின் சில பகுதிகளில் இருப்பவர்கள் மட்டும் நாளை இரவு (ஜூலை 8) காண முடியும்.

எரிகற்கள் மிக பயங்கர வேகத்தில் பயணிப்பவை என்பதால் இந்த நிகழ்வு 5 நொடிகள் மட்டுமே நீடிக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .