2024 ஏப்ரல் 16, செவ்வாய்க்கிழமை

மட்டு. மாநகரசபை உறுப்பினரை தேடும் பணிகள் தொடர்கிறது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

 

கடந்த திங்கட்கிழமை முதல் காணாமல் போயுள்ள மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் பி.சகாயமணியைத் தேடும் பணிகளை மட்டக்ககப்பு பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருபிள்ளைகளின் தந்தையான இவர் காணாமல் போய் நான்கு நாட்களைக்கடந்து விட்டநிலையிலும் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இன்று காலை இவரது மனைவியை மட்டக்களப்பு பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து மேலதிக தகவல்களைப் பெற்றதுடன் சகாயமணியுடன் தொடப்புடைய இடங்களுக்கும் மனைவியை அழைத்துச் சென்றனர். புன்னச்சோலையிலுள்ள அவரது இல்லத்திற்கு எமது செய்தியாளர் சென்று மேலதிக தகவல்களைப் பெற்றபோது பிடிக்கப்பட்ட படங்கள் இங்கே காணப்படுகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .