2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பெரஹரவுக்காக வீதி மூடல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பெல்லன்வில விகாரையில் நடைபெறவுள்ள எசல பெரஹரவை முன்னிட்டு தெஹிவளை மற்றும் மஹரகம வீதியில் பொரலஸ்ஹமுவவிலிருந்து பெல்லந்தர சந்தி வரையிலான வீதி நாளை வெள்ளிக்கிழமை மாலை மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாளை வெள்ளிக்கிழமை மாலை 7 மணி முதல் எசல பெரஹர முடிவடையும் வரை மேற்படி வீதி மூடப்பட்டிருக்கும் எனவும்  பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த எசல பெரஹரவானது நாளையும் நாளைமறுதினமும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், பொரலஸ்ஹமுவ சந்தியிலிருந்து நெதிமலை சந்தி வரையும் மற்றும் பெப்பிலான சந்தியும் எதிர்வரும் 28 ஆம் திகதி மூடப்படவுள்ளது.

இந்நிலையில், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கோரியுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .