2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பொன்சேகா குடும்பம் அரசாங்கத்தின் முன் ஒருபோதும் மண்டியிடாது-ரில்வின் சில்வா

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 10 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவின் குடும்பத்தினர் அரசாங்கத்தின் முன்னிலையில் ஒருபோது மண்டியிடப் போவதில்லை என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா  தெரிவித்தார். சற்றுமுன் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கூறினார்.

வெலிக்கடை சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள சரத் பொன்சேகா, அல்லது அவரது குழும்பத்தினர் அரசாங்கத்திடம் மன்னிப்பு கோரும் பட்சத்தில் அவரது விடுதலை குறித்து ஜனாதிபதியினால் கவனத்திற் கொள்ளப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே ரில்வின் சில்வா மேற்கண்டவாறு குறிப்பிட்டார். Pix by :- Pradeep Dilrukshana


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .