2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தண்டனைக்காலம் முடிந்தும் சிறையில்

Super User   / 2010 ஒக்டோபர் 19 , மு.ப. 07:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர் ஒருவர் தண்டனைக் காலம் முடிந்த பின்னரும் சிறையில் வைக்கப்பட்டிருப்பதாக அவரின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.

சவூதி அரேபியாவில் தொழில்வாய்ப்பு தேடிச் சென்ற இந்த இளைஞர் மேலும் இரு இலங்கையர்களுடன் சேர்ந்து 140,000 சவூதி றியால் பெறுமதியான நகைகளை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

சவூதி நீதிமன்றமொன்று அவருக்கு மூன்றரை வருட சிறைத்தண்டனையும் 50 கசையடிகளையும் விதித்து தீர்ப்பளித்து. இத்தண்டனைக்காலம் கடந்த ஓகஸ்ட் மாதம் முடிவடைந்தது. எனினும் அவர் இன்னும் சிறையிலேயே வைக்கப்பட்டுள்ளதாக அந்த இளைஞரின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். (ஜூட் சமந்த)


You May Also Like

  Comments - 0

  • Fahim Tuesday, 19 October 2010 07:22 PM

    அவன் உணவுப் பஞ்சத்துக்காக திருடவில்லை. ஆடம்பரத்துக்காகவே திருடியுள்ளான். அவனுக்கு வழங்கிய தண்டனை போதாது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .