2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய நூல் விருதுகள்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)
கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் இலக்கிய நூல்களுக்கான  பரிசு பெறுவோரது விபரங்களை மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சு  வெளியிட்டுள்ளது.

திருமதி ஜெனீரா ஹயருன் அமானின் 'சின்னக்குயில் பாட்டு' எனும் சிறுவர் பாடல்,  ச.அருளானந்தத்தின் 'அற்புதமான வானம்' எனும் சிறுவர் கதை, முத்து இராதாகிருஷ்ணனின்  'பசுமைத் தாயகம்' எனும் சிறுவர் நாடகம், இக்பாலின் 'தாமரையின் ஆட்டம்' எனும் சிறுவர் கவிதை,  சடாட் சரத்தின் 'மேட்டு நிலம்' எனும் சிறுகதை,  எவ்.நபீலீன் 'காலமில்லாக் காலம்' எனும் கவிதை, மற்றும் குணரத்தினத்தின் 'அரசறிவியல்' எனும் உயர் கல்விக்குரிய நூல் என்பன விருதுகளுக்காக  தெரிவாகியுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .