2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக த.தே.கூட்டமைப்பு வழக்கு

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதேவளை இன்று அரசியல் விவகார அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரான பேராசிரியர் ரஞ்சித் அமரசிங்க மற்றும் பேராதெனிய பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞான பிரிவின் தலைவரான பேராசிரியர் நரேந்திரா பண்டார ஆகியோரும் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

கடந்த வாரம் உள்ளூராட்சி திருத்தச் சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போதும் அது விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X