2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

சுஜீவ எம்.பி, வண ஒமரே கஸ்ஸப்ப தேரர் சமரசத்துக்கு இணக்கம்

Super User   / 2010 ஒக்டோபர் 26 , பி.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(பாரூக் தாஜுடீன்)

உயர் நீதிமன்ற பொது லிப்டிற்கு அருகில் வைத்து தன்னை ஐக்கிய தேசிய கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க ஏசியதாக வண.ஓமரே கஸ்ஸப்ப தேரரினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் வழக்காளியும் பிரதிவாதியும் தம்க்குள் இணங்கிக் கொள்ள விரும்புவதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இரு பகுதியினரதும் சட்டத்தரணிகள் இதனை மன்றில் தெரிவித்து முடிவை கூற தவணை வழங்க கோரினர். ஜனவரி 18ஆம் திகதி தவணை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் வண.ஒமரே கஸப்பா தேரர் வழக்களியும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க பிரதிவாதியுமாவார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X