2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வைத்தியசாலை மலசலகூடத்திலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலம் கண்டுபிடிப்பு

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 28 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கம்பஹா வைத்தியசாலையின் மகளிர் பிரிவு மலசலகூடமொன்றிலிருந்து ஆண் சிசுவொன்றின் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

பொலித்தீன் பையினால் சுற்றப்பட்டிருந்த நிலையில் மலசலகூடத்தின் தண்ணீர் தொட்டியொன்றுக்குள் இடப்பட்டிருந்த நிலையிலேயே இந்த சிசுவின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் கூறினார்.  

குறித்த மலசலகூடத்தை சுத்தம் செய்யும் பணியாளர்களால் மீட்கப்பட்ட இந்த சிசுவின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கம்பஹா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (M.M)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .