2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

சமிட் பிளேஸிலிருந்து வெளியேறாத முன்னாள் எம்.பிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 28 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(றிப்தி அலி)

கொழும்பு 7இல் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான "சமிட் பிளேஸ்" வீட்டுத் தொகுதியிலிருந்து வெளியேறாமலுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், டி.சித்தார்த்தன், வடிவேல் சுரேஷ், எம்.எஸ்.அமீர் அலி ஆகியோர் இதுவரை வெளியேறவில்லை என அமைச்சின் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.

அத்துடன் முன்னாள் அமைச்சர் மறைந்த அமரசிரி தொடங்கொடவின் குடும்பத்தினரும் தொடர்ந்து சமிட் பிளேஸ் வீட்டுத் தொகுதியில் வசித்து வருவதாகவும் உயர் அதிகாரி குறிப்பிட்டார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X