2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பொதுமக்களுக்கு ஜே.வி.பி. அழைப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 30 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மாணவர்களின் உரிமைகள் அரசாங்கத்தால் ஒடுக்கப்படுவதற்கு எதிராகவும் இலவசக் கல்வியை பாதுகாப்பதற்கும் ஒன்றிணையுமாறு  மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மாற்று அபிப்பிராயங்களைக் கொண்டவர்களை அரசாங்கம் ஒடுக்குவதாக இன்று வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. 28 மாணவர்கள் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாடுமுழுவதும் இருநூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புத் தடைக்குள்ளாகி இருப்பதாகவும் ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.

அனைத்துப்  பல்லைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் உதுல் பிரேமரட்ண உட்பட கைதுசெய்யப்பட்ட அனைத்து மாணவர்களையும் விடுதலை செய்யுமாறும் ஜே.வி.பி வலியுறுத்தியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .