2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ஒழுங்கீனமான பல்கலை மாணவர்களுக்கு எதிராக சட்டம் செயற்படும் - கெஹெலிய

Menaka Mookandi   / 2010 நவம்பர் 04 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்கமான முறையில் நடந்துகொள்வதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. அதனை மீறும் பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டம் தொழிற்படும் என்று ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவையின் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கத்துக்கு எதிராக பாரியதொரு சதித்திட்டத்தில் ஈடுபடுவதற்கு பல்கலைக்கழக மாணவர்கள் ஈடுபட முயற்சிப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறான சதிகளுக்கும் அந்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் இடமளிக்கப்போவதில்லை என்றும் அமைச்சர் கூறினார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று வியாழக்கிழமை முற்பகல் ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போது அங்கு கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.  (MM)


You May Also Like

  Comments - 0

  • Nifrees ismail lebbe Thursday, 04 November 2010 10:19 PM

    அப்படியென்றால் அடக்கிறதுக்கும் அரசுக்கு ஒழுக்கம் தேவை

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .