2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பி.பி.சிக்கு அனுதி மறுப்பு

Super User   / 2010 நவம்பர் 11 , பி.ப. 04:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட அமர்வுகள் தொடர்பாக செய்தி சேகரிக்க செல்வதற்கு பி.பி.சி செய்திச் சேவைக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு யாழ்ப்பாணத்தில் சாட்சியங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறது.

 

 

 

 

யாழ்ப்பாணம் சென்று நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகளில் பங்கேற்க பி.பி.சிக்கு அனுமதி வழங்க பாதுகாப்பு அமைச்சு அனுமதி மறுத்துவிட்டது. எனினும் அனுமதி மறுப்புக்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதியில்லாமல் வெளிநாட்டவர்கள் யாழ்ப்பாணம் செல்ல முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடக்கில்ஆணைக் குழுவின் அமர்வுகளில் பி.பி.சி பங்கேற்க முடியாத வகையில் கடந்த இரு மாதங்களில் தற்போது இரண்டாவது தடவையாக பி.பி.சிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பி.பி.சி. தெரிவித்துள்ளது.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .