2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வனத்துறை உத்தியோகஸ்தர்கள் மீது கிராமவாசிகள் தாக்குதல்

Super User   / 2010 நவம்பர் 13 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொலன்னறுவை மன்னம்பிட்டி கிராமவாசிகளால் வனத்துறை உத்தியோகஸ்தர்கள் 6 பேர் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி வனத்துறை உத்தியோகஸ்தர்கள் லொறி சாரதியொருவரை மணல் அகழ்வுப் பகுதியொன்றில் வைத்து தாக்கியதைத் தொடர்ந்து கிராமவாசிகளால் வனத்துறை உத்தியோகஸ்தர்கள் தாக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரசாந்த ஜெயகொடி டெய்லி மிரர் இணையத்தளத்திற்குத் தெரிவித்தார்.

தனிப்பட்ட பிரச்சினையொன்றின் காரணமாக, லொறி சாரதியை மணல் அகழ்வுப் பகுதிக்கு வனத்துறை அதிகாரிகள் அழைத்துச் சென்று அவரை தாக்கியதாகவும் அதன்பின் கிராமவாசிகளால் வனத்துறை உத்தியோகஸ்தர்கள் தாக்கப்பட்டதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .