2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

உதுல் பிரேமரட்ன பிணையில் விடுதலை

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 09 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

(பாரூக் தாஜுதீன்)

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன பிணையில் செல்வதற்கான அனுமதியை இன்று  கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது.

இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் உதுல் பிரேமரட்ன  மனு  விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே,    50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் செல்லுவதற்கு கொழும்பு  மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர அனுமதியளித்தார்.

இதேவேளை, உதுல் பிரேமரட்ன எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளவோ  அல்லது சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையிலோ ஈடுபடக் கூடாதெனவும் நீதிபதி உத்தரவிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .