2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐ.நா. நிபுணர் குழுவுக்கான காலஅவகாசம் நீடிப்பு

Super User   / 2010 டிசெம்பர் 17 , மு.ப. 11:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை விவகாரம் குறித்து தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, அதன் அறிக்கையை சமர்ப்பிதற்கான காலஅவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா.வின் பதில் பேச்சாளர் பர்ஹான் ஹக் இத்தகவலைத் தெரிவித்தாக இன்னர்சிற்றி பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இக்கால அவகாச நீடிப்பு குறித்து இதுவரை உத்தயோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


இது தொடர்பாக மின்னஞ்சல் மற்றும் பெடரல் எக்ஸ்பிரஸ் சேவை மூலம் அனுப்பப்பட்ட தகவல்களுக்கு பதில் கிடைக்கவில்லை என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.

பெடரல் எக்ஸ்பிரஸ் மூலம் ஐ.நாவுக்கு அனுப்பப்பட்ட தபாலை பெற்றுக்கொள்ள எவரும் இல்லாததால் திரும்பிவந்ததாகவும் இன்னர்சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .