2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு கோரிக்கை

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 11 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 800,000 மக்களுக்கு உதவி வழங்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம், பொதுமக்களிடம் கோரியுள்ளது.

இடம்பெயர்ந்த மக்களுக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களை வழங்குமாறு பொதுமக்களிடம், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கேட்டுக்கொண்டுள்ளார்.  

குடிநீர், ஆடைகள், உலர் உணவுப் பொருட்கள் ஆகியன தேவைப்படுகின்றன. பணத்தை நாம் ஏற்றுக்கொள்ளமாட்டோம். எனினும், எவராது பணம் வழங்க விரும்பினால் அதனை நாம் வரவேற்பதுடன், பணத்தை பிரதேச செயலகங்களில் கையளிக்குமாறும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகியன மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகுமென பிரதீப் கொடிப்பிலி மேலும் தெரிவித்தார்.  (NH)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .