2024 மார்ச் 28, வியாழக்கிழமை

யார் தளபதியாக இருந்திருந்தாலும் யுத்தத்தில் வென்றிருப்பார்கள்: கோட்டாபய

Super User   / 2011 ஜனவரி 25 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாருக் தாஜுதீன், லக்மல் சூரியகொட)

மேல் நீதிமன்றத்தில் நடைபெறும் வெள்ளைக் கொடி வழக்கில் சாட்சியமளித்த பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ,  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மாத்திரமல்ல, அப்பதவியில் யார் இருந்திருந்தாலும் யுத்தத்தில் வென்றிருப்பார்கள் எனத் தெரிவித்தார்.

யுத்தத்தில் வெற்றி பெறுவதற்கு விமானப்படைத் தளபதியும் கடற்படைத் தளபதியும் கடுமையாக பாடுபட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளார் கூறினார்.

2009 ஆம் ஆண்டு டிசெம்பர் 13 ஆம் திகதி சண்டே லீடர் பத்திரிகையின் முன்பக்கத்தில் குறித்த செய்தியை தான்; பார்த்ததாகவும் அதன் உள்ளடக்கம் தவறானவையாக காணப்பட்டாகவும் பாதுகாப்புச் செயலர் கூறினார்.

அதேவேளை,  சரணடைந்த எவருக்கும் தீங்கிழைக்குமாறு தான் படையினரை அறிவுறுத்தவில்லை  எனவும்  சரணடைந்தவர்களுக்கு பாதுகாப்பளிக்குமாறு தான் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 


You May Also Like

  Comments - 0

  • raheem Tuesday, 25 January 2011 09:44 PM

    இது உண்மை...முப்பது வருட யுத்தம் இரண்டாண்டில் முடிந்தது என்றால் நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.நாம் ஒவ்வொருவரும் கருணாவிற்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்....

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X