2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட மீனவர்கள் இலங்கைக்குத் திரும்பினர்

Super User   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை மீனவர்களில் மூவர்  17 நாட்கள் கடலில் கடும் சிரமங்களை எதிர்கொண்ட பின்னர் நேற்றிரவு இலங்கைக்குத் திரும்பியுள்ளனர்.

மாத்தறை மிரிஸ்ஸவிலிருந்து கடந்த ஜனவரி மாதம் புறப்பட்ட 5 மீனவர்கள் இலங்கையிலிருந்து 2000 கடல் மைல் தூரத்தில் சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது சோமாலிய கடற்கொள்ளையர்களால் பிடிக்கப்பட்டனர்.

ஜனவரி 27 ஆம் திகதி அம்மீனவர்களில் இருவர் கடற்கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஏனைய 3 மீனவர்களும் பெப்ரவரி 3 ஆம் திகதி விடுவிக்கப்பட்டனர்.

மிரிஸ்ஸ மீன்பிடி துறைமுகத்தில் பெரும் எண்ணிக்கையான மக்கள் கூடிநின்று இம்மீனவர்களை வரவேற்றனர்.

நேற்று இலங்கைக்குத் திரும்பிய அம்மீனவர்கள் கடற்கொள்ளையர்களால் படகில்விட்டுச் செல்லப்பட்ட வெற்றுத் தோட்டாக்கள் மற்றும் மின்குமிழ் விளக்கு (டோர்ச் லைட்) என்பவற்றை சட்ட நடடிக்கைகளுக்கான ஆதாரமாக பொலிஸாரிடமம் ஒப்படைத்தனர். அந்த மின்குமிழ் விளக்கில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் உருவப்படம் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

         


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .