2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

லிபியாவிலுள்ள இலங்கையர்களை அழைத்துவர அனைத்து ராஜதந்திர தொடர்புகளையும் பயன்படுத்தும் அரசாங்கம்

Super User   / 2011 மார்ச் 01 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(டியன் சில்வா)

லிபியாவிலிருந்து வெளியேறும் இலங்கையர்களை தாயகத்திற்கு அழைத்து வருவதற்கு இலங்கை அரசாங்கம் தனது அனைத்து ராஜதந்திர வலையமைப்புகளையும் பயன்படுத்துவதாக வெளிவிவகார அமைச்சின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் ரஞ்சித் உயன்கொட தெரிவித்துள்ளார்.

லிபிய தலைநகர் திரிபோலியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் 350 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அவர்களை ரோயல் ஜோர்டான் எயார்லைன்ஸ் விமான சேவை மூலம் அல்லது விசேட விமானமொன்றின் மூலம் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

லிபியாவின் பெங்காஸி பிராந்தியத்திலிருந்து 111 பேரை இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்திய அரசாங்கம் தனது பிரஜைகளை லிபியாவிலிருந்து அழைத்து வருவதற்கு படகொன்றை பயன்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

29 பேர் சைப்பிரஸுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களை இலங்கைக்கு வான் வழியாக அனுப்ப ரோமிலுள்ள இலங்கை தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும் 22 மற்றும் 54 பேர் கொண்ட இரு குழுக்கள் மால்டாவுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அதேவேளை, இலங்கைக்கு வரும் வழியில் கிறீஸில் வைத்து இலங்கையர்கள் தலைமறைவானதால் இலங்கையர்கள் தமது நாட்டிற்குள் நுழைவதற்கு தடை விதிப்பது குறித்து கிறீஸ் அரசாங்கம் ஆலோசித்து வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் கூறினார்.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .