2024 மார்ச் 28, வியாழக்கிழமை

இலங்கை அகதி விபத்தில் மரணம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை அகதியொருவரை வாகனத்தால் மோதி விட்டு தப்பிச்சென்றுள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் 31 வயதான ஹெரோய்ன் பாவனைக்கு அடிமையான நபரொருவருக்கு 8 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் டான்டெனொங் எனும் பகுதியிலுள்ள புகையிரதக் கடவையில்; ஜரட் சுவான் என்பவரின் கார் மோதியதில்  திருவடிவேல் ஸ்ரீஸ்காந்தராஜா என்பவர் பலியானார்.

குறித்த இலங்கை அகதி 27 மீற்றருக்கு அப்பால் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயே பலியானார்.  இவர் 6 மாதங்களுக்கு முன்னரே அவுஸ்திரேலியாவுக்கு வந்தவர் ஆவார்.  

ஹெரோய்ன்  பாவனைக்கு அடிமையான ஜரட் சுவான் விரைவாக காரை செலுத்தி வந்து காரை நிறுத்துவதற்கு தவறியதாகவும்  நீதிமன்றம் தெரிவித்தது.

8 வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜராட் சுவான்  குறைந்தபட்சம் 6 வருடகாலமாவது சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டி நேரிடுமெனவும் தெரிவிக்கப்படுகிறது. (DM)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X