2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

சேனக டி சில்வா பிணையில் விடுதலை

Super User   / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

முன்னாள் இராணுவத் தளபதி சரத்பொன்சேகாவின் தேர்தல் செயலாளராக பணியாற்றிய சேனக டி சில்வா 2 லட்சம் ரூபா  ரொக்கப்பிணையிலும்  தலா 2 லட்ச ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புpணை வழங்கக் கோரி சேனக டி சில்வா தாக்கல் செய்த மனுவையடுத்து அவர் நிபந்தனையுடன்கூடிய பிணையில் செல்வதற்கு கடந்த 28 ஆம் திகதி மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த வருடம் பெப்ரவரி 8 ஆம் திகத அவர் சரத் பொன்சேகாவுடன் கைதுசெய்யப்பட்டிருந்தார். தப்பியோடிய இராணுவத்தினருக்கு அடைக்கலம் வழங்கியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .