2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ரோந்தின் காரணமாக இலங்கை கடற்படை அத்துமீறி நுழைவதில்லை: இந்தியா

Super User   / 2011 ஜூன் 10 , பி.ப. 12:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்திய கடற்பரப்பில் இந்திய கரையோர காவல் படையினரின் கப்பல்கள், ரோந்துக் கலங்கள் 24 மணித்தியால ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால் சீன மற்றும் இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறிய நுழைவுகள் இடம்பெறவில்லை என  இந்திய கரையோர காவல் படை இன்று தெரிவித்துள்ளது.

'இந்திய கரையோர காவல்படை இந்திய கடற்பரப்பில் 24 மணித்தியால ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இப்படையின் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் கிரமமான காணிப்புகளில் ஈடுபடுகின்றன என மண்டபத்திற்கு அருகிலுள்ள இந்திய கரையோர காவல்படைத நிலையத்தின் தளபதி எச். ஹிரிஷ் மோரே கூறினார்.

இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு குறித்து அவர் கூறுகையில், "இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை கடந்து செல்லும்போதுமாத்திரமே அத்தகைய சம்பவங்கள் இடம்பெறுகின்றன. மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையை கடக்கக்கூடாது" என்றார்.. (பி.ரி.ஐ.)
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .