2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐ.நா. படைகளில் பணியாற்றும் அனைத்து துருப்பினரும் பல்திறமையானவர்களாக விளங்க வேண்டும்: இராணுவத் தளபதி

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 27 , மு.ப. 01:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

'ஐ.நா. படைகளில் பணியாற்றும் அனைத்து துருப்பினரும் பல்திறமையானவர்களாகவும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் விளங்க வேண்டும். இவை இத்தகைய சர்வதேச கடமைகளின் ஆற்றலை அதிகரிக்கும்' என இராணுவத் தளபதி லெப் ஜெனரல் ஜகத் ஜயசூரிய கூறியுள்ளார்.

லெபனானில் ஐ.நா. சமாதானப் படையில் பணியாற்றும் இலங்கைத் துருப்பினர் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

லெபனானில் பணியாற்றும் இலங்கைப் படையினரை பார்வையிடச் சென்ற இராணுவத் தளபதி, அத்துருப்பினர் ஒழுக்கத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்க வேண்டும் எனவும் கோரினார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கை சமாதானப் படையினர் அனைவரினதும் பங்களிப்புகளை பாராட்டிய இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய, இத்துருப்பினர் இலங்கை இராணுவத்தினதும் நாட்டினதும் நற்பெயரை பாதுகாக்க வேண்டும் எனக் கோரினார்.


You May Also Like

  Comments - 0

  • nakkiran Tuesday, 27 September 2011 02:57 PM

    நேற்று இரண்டு பேருக்கு அவாட்டு கொடுத்தார்கள் கோட்டில்.

    Reply : 0       0

    ruban Tuesday, 27 September 2011 06:36 PM

    முக்கியமான விடையத்தை சொல்ல மறந்திட்டார் [கெய்ட்டியில் நடந்ததை ]

    Reply : 0       0

    Mubeen Saturday, 14 January 2012 10:11 PM

    முக்கியமாக மனித நேயத்தையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X