2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சவூதி வாகன விபத்தில் இலங்கைத் தம்பதியினர் பலி

Super User   / 2011 ஒக்டோபர் 14 , பி.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கை யாத்திரிகர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று முன்தினம் புதன்கிழமை, மக்கா – ஜெத்தா வீதியில் இவர்கள் பயணம் செய்த வாகனம் கவிழ்ந்ததால் அப்துல் வாஹிட் ஜவாத் (47) மற்றும் அவரின் மனைவியான அப்துல் ஹலீம் ஷம்சுன்நிஷா (42) ஆகிய இருவரும் பலியானதாக ஜெத்தாவிலுள்ள இலங்கை கொன்ஸுல் ஜெனரல் ஆதம்பாவா உதுமாலெப்பே தெரிவித்துள்ளார்.

ஜெத்தாவிலிருந்து 4 கிலோமீற்றர் தொலைவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவர்கள் இலங்கையின் கலகெதரவைச் சேர்ந்தவர்கள் எனவும் அராப் நியூஸ் பத்திரிகைக்கு அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாகனத்திலிருந்த வெளிநாட்டு யாத்திர்களான வேறு பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர் என அராப் நியூஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
 


You May Also Like

  Comments - 0

  • Jawzan Saturday, 15 October 2011 12:46 PM

    Yennalillahi vainnaelihi rajewoon!

    Reply : 0       0

    mohomed rafi Saturday, 15 October 2011 01:37 PM

    i'm very sad for this news!

    Reply : 0       0

    abdul Saturday, 15 October 2011 05:13 PM

    இன்னாளிலஹி வ இன்னா இலிஹி ராஜிஹூன்.

    Reply : 0       0

    zaneer Sunday, 16 October 2011 12:39 AM

    இன்னாளில்லாஹி வஹின்னா இலைஹி ராஜ்ஹூன்.......

    Reply : 0       0

    nawas Sunday, 16 October 2011 12:57 AM

    யா அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸில் நுழைவிப்பாயாக.

    Reply : 0       0

    சிறாஜ் Sunday, 16 October 2011 04:30 AM

    காலஞ்சென்ற இரண்டு உள்ளங்களுக்கும் சுவர்க்கத்தின் பூஞ்சோலை கிடைத்திட அல்லாஹ் அருள் புரியட்டும்.

    Reply : 0       0

    mohamed imran Sunday, 16 October 2011 10:59 PM

    யா அல்லாஹ் அவர்களது பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தௌஸில் நுழைவிப்பாயாக.

    Reply : 0       0

    Ashiq Sunday, 16 October 2011 11:39 PM

    ooh Allah , forgive their sin and grant them Jannathul Firdouse

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .