2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பொன்சேகாவுக்கு எதிரான வழக்கு ஜனவரிக்கு ஒத்திவைப்பு

Super User   / 2011 நவம்பர் 14 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.பாருக் தாஜுதீன்)

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களுக்கு அடைக்கலம் கொடுத்ததாகவும் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாகவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா மற்றும் அவரின் பிரத்தியேக உதவியாளர் சேனக ஹரிபிரிய ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டு  தொடுக்கப்பட்ட வழக்கு ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சரத் பொன்சேகா இவ்வழக்கில் தனது சார்பாக வாதாடுவதற்கு தன்னை நியமித்திருப்பதாக சிரேஷ்ட சட்டத்தரணி நளின் லத்துவஹெட்டி தெரிவித்தார். இவ்வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறும் அவர் கோரினார்.

அரசின் சார்பில் ஆஜரான சிரேஷ்ட சட்டத்தரணி தமித் தொட்டவத்த இக்கோரிக்கையை ஆட்சேபித்தார்.

எனினும் இறுதியில் மேல் நீதிமன்ற நீதிபதி தீபாலி விஜேசுந்தர இவ்வழக்கை ஜனவரி 23 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X