2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் முதல் வாகன விபத்து; இருவர் காயம்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 28 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு  அதிவேக நெடுஞ்சாலையில்  இன்று திங்கட்கிழமை காலை 7.10 மணியளவில்  விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. கஹதொடுவையிலுள்ள 8ஆவது மைல் தொலைவிற்கு அருகிலேயே இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றது.

கொழும்பு நோக்கிச்  சென்ற வான் தடம்புரண்டதாகவும் இதில் பயணித்த   இருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக ஹொறன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வான் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் என்னும் வேகத்தை விட மேலதிகமாக பயணித்ததாலேயே இந்த விபத்து இடம்பெற்றதாகவும்  வெளிநாட்டவரொருவரும் வான் சாரதியுமே இந்த விபத்தில் காயமடைந்தவர்ளெனவும்  பொலிஸார் கூறினர்.

இலங்கையின் முதலாவது தெற்கு  அதிவேக நெடுஞ்சாலை  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை உத்தியோகபூர்வமாக  திறந்துவைக்கப்பட்டது.(Buddika Kumarasiri)


You May Also Like

  Comments - 0

  • meenavan Monday, 28 November 2011 03:56 PM

    வீதி திறக்கப்பட்டு 24 மணி நேரத்தினுள் விபத்தினால் இருவர் காயமடைந்தால் இனி வரும் நாட்கள் எவ்வாறு அமையுமோ? அதிவேக நெடுஞ்சாலை அதே வேகத்தில் மூடப்படுமோ? அல்லது கப்பல் நுழையா ஹம்பாந்தோட்டை ஹார்பர் போன்று அதிவேக வீதி மித வேக வீதியாகுமா? பொறுத்திருப்போம்.

    Reply : 0       0

    neethan Monday, 28 November 2011 05:10 PM

    அதி வேக வீதிக்கு வாகனங்களை அனுமதிக்க முன்னர், வாகனங்களின் தரம் (condition) டயர், ப்ரேக் சாரதி தகமை அறிந்து செயல்படுவது விபத்துகளை தவிர்க்க உதவும். முக்கியமாக நமது நாட்டு சாரதி அனுமதி பத்திரம் வழங்கும் யாவரும் அறிந்ததே?

    Reply : 0       0

    Riyash Monday, 28 November 2011 05:35 PM

    தொடங்கிட்டாங்கைய்யா....... !! !!

    Reply : 0       0

    Abu hamadi Monday, 28 November 2011 08:09 PM

    அதி வேக வீதிக்கு வாகனங்களை செலுத்த முன் அதற்கு தகுதியானவர்களாக எம்மவர்கள் மாற வேண்டும்.

    Reply : 0       0

    kulathooran Tuesday, 29 November 2011 08:54 PM

    புது செருப்பு கடிக்கும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .