2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேஸ்புக் சண்டையில் மாணவன் காயம்

Menaka Mookandi   / 2012 ஒக்டோபர் 10 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் (முகப்புத்தகம்) சமூக வலைத்தளத்தில் அனுமதியின்றி புகைப்படமொன்றை பதிவேற்றம் செய்தார் என்ற காரணத்தை முன்வைத்து பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள சர்வதேச பாடசாலையொன்றின் மாணவர்கள் இருவருக்கும் இடையில் மோதலொன்று இடம்பெற்றுள்ளது.

உயர்தர வகுப்பைச் சேர்ந்த மேற்படி மாணவர்களிருவருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலை அடுத்து ஒருவர் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பில் இதுவரையில் பொலிஸ் முறைப்பாடுகள் எவையும் பதிவு செய்யப்படவில்லை என பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .