2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னைத்தானே சுட்டு தற்கொலை

Menaka Mookandi   / 2012 நவம்பர் 08 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று இரவு 9.35 மணியளவிலேயே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்தது.

சி.ஐ.போதாகொட என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். எல்பிட்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு குறிப்பிட்டது.

தனிப்பட்ட விவகாரமே இந்த தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடக பிரிவு மேலும் கூறியது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .