2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.நா. அறிக்கைக்கு கனடா வரவேற்பு

Kogilavani   / 2012 நவம்பர் 18 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் யுத்தம் இடம்பெற்றபோது ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் வெளியிட்டுள்ள உள்ளக அறிக்கையை கனடா வரவேற்றுள்ளது.

இது தொடர்பில் கனடா வெளிவிவகார அமைச்சர் ஜோன் பெயார்ட் தெரிவிக்கையில்,

'இலங்கை மக்கள் பலவருடங்களாக முகம்கொடுத்து வருகின்ற மனித உரிமை மீறல்களை இந்த அறிக்கை வெளிக்கொணர்ந்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பிலான பொறுப்புகள் தொடர்பில் நான் தொடர்ந்து அவதானத்தை செலுத்தி வருகின்றேன்.

இந்த அறிக்கையானது இறுதி யுத்தத்தின்போது ஐ.நா.மற்றும் அதன் தொண்டு நிறுவனங்களின் இயலாமையை சுட்டிக்காட்டியுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகள் ஏற்படாமல் இருக்கவும் எதிர்கால தோல்விகளை தடுப்பதற்கான எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும் பரிந்துரைத்துள்ளது' என்று தெரிவித்துள்ளார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .