2024 மார்ச் 28, வியாழக்கிழமை

கடும் மழை; இருவர் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் பெய்து வருகின்ற அடை மழையினால் இருவர் உயிரிழந்துள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

நொனாகம, அம்பலாந்தோட்ட பகுதியில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் ஒருவரும் கஹவத்தைப் பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் அகப்பட்டு ஒருவருமே உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையைத் தொடர்ந்து அந்த மாவட்டத்தில் உள்ள தாழ்நிலப்பகுதிகளும் வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

மாகந்துர, ரஞ்சாகொட, அம்பலாந்தோட்ட, கும்புறுப்பிட்டிய ஆகிய பகுதிகளிலுள்ள தாழ்நிலங்களும் வீதிகளுமே இவ்வாறு மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X