2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

பாரத லக்ஷ்மன் கொலைச் சந்தேகநபர்கள் ஐவருக்கு பிணை

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 21 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை அனுபவித்து வந்த சந்தேகநபர்களில் ஐவருக்கு மேல் நீதிமன்றம் இன்று பிணையில் செல்ல அனுமதி வழங்கியது.

தலா 25 ஆயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளிலும் செல்ல நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.

மஞ்சுள பிரசாத் ஹெட்டியாரச்சி, கே.ஏ.லங்கா ரசாஞ்ஜன, நாலக்க சஞ்ஜீவ, தரிந்து அசங்க மற்றும் பாரத லக்ஷ்மனின் பாதுகாப்பு உத்தியோகஸ்தரான ஆர்.காமினி ஆகியோருக்கே இவ்வாறு பிணையில் செல்ல அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தொழிற்சங்கத்தின் ஆலோசகரான பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரன் உட்பட நான்கு பேர், கடந்த மாகாணசபைத் தேர்தலின் போது கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X