2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழ்,சிங்கள மாணவர்கள் பல்கலைக்கு தெரிவாவதில் வீழ்ச்சி

Kanagaraj   / 2012 டிசெம்பர் 22 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அழகன் கனகராஜ்)

பல்கலைகழகங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தெரிவாவதில் வீழ்ச்சு ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

இலவச கல்விக்கு கோடிக்கணக்கில் நிதி செலவிடப்படுகின்றது. அந்த இலவச கல்வியில் கற்றவர்களுக்கு தொழில் வாய்ப்பு இல்லை, தொழில் வாய்ப்புக்கு ஏற்றவகையில் கற்றவர்களும் நாட்டில் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பில், அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கல்வியமைச்சு தொடர்பான நாடாளுமன்ற குழுவுக்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட யோசனைகள் கிடைத்தன. அந்த யோசனைகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிப்பெயர்ப்பதற்கு போதியளவான வசதிவாய்ப்புகள் இன்மையினால் உரிய காலத்திற்குள் அந்த யோசனைகளை வெளியிடமுடியாதுள்ளது.

ஆரம்ப பாடசாலைகளில் மாணவர்களை சேர்த்துக்கொள்ளல்,இடைவிலகல் மற்றும் எழுத்தறிவு போன்றவற்றில் பிரச்சினைகள் இல்லை சார்க்வலய நாடுகளுடன் ஒப்பிடுகையில் உயர்மட்டத்திலும் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு அண்மையிலும் நாம் நிற்கின்றோம்.

ஆங்கில பட்டத்தாரி ஆசிரியர்களுக்கான வேலைவாய்ப்புகள் 800 இருக்கின்றன. எனினும் நாட்டில் 202 ஆங்கில பட்டத்தாரி ஆசிரியர்களே இருக்கின்றனர். நாட்டில் 336 பிரதேச செயலங்கள் இருக்கின்றன. அதில் 72 பிரதேச செயலங்களில் விஞ்ஞான பாடசாலைகள் ஒன்றுகூட இல்லை.

சிங்களம்,தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்கள் சகலருக்கும் சமவுரிமை வழங்கும் வகையிலேயே 1000 பாடசாலைகள் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

2009 ஆம் ஆண்டை பொறுத்தவரையில்  பல்கலைகழகங்களுக்கு தமிழ் மற்றும் சிங்கள மாணவர்கள் தெரிவாவதில் வீழ்ச்சு ஏற்பட்டுள்ளது. ஆனால் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவதில் பாரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

அந்த ஆண்டில் பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்களில் 0.9 வீதமும் தமிழ் மாணவர்களில் 0.2 வீதமும் வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவது அந்த ஆண்டில் மட்டும் 10.8 வீதத்தினால் அதிகரித்துள்ளது.

சப்ரகமுவ மாகாணத்தை பொறுத்தவரையில் உயர்தரத்தில் தமிழ் மொழிமூலமான கணித மற்றும் விஞ்ஞான பாடசாலைகள் ஒன்றுக்கூட இல்லை. நாடளாவிய ரீதியில் விஞ்ஞான கூடம் உள்ளடங்களாக 409 பாடசாலைகள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், ஒரே பாடசாலையில் 20 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள் 3100 பேரும் 10 வருடங்களுக்கு மேலாக கற்பிக்கும் ஆசிரியர்கள் 9300 பேரும் இருக்கின்றனர் அவர்களுக்கு 2013 ஆம் ஆண்டு நிச்சயமாக இடமாற்றம் வழங்கப்படும் என்றார்.

You May Also Like

  Comments - 0

  • meenavan Sunday, 23 December 2012 01:16 AM

    ஏன் 2009 ஆண்டு மட்டும் முஸ்லிம்களின் பல்கலைகழக அனுமதி அதிகரிப்பு பற்றிய குறிப்பு....???? 2010 ம் ஆண்டு அனுமதி அறிக்கை கிடைக்கவில்லையா? இதுவும் ஒருவகையான இனவாத சிந்தனையே.

    Reply : 0       0

    Mokammed Hiraz Sunday, 23 December 2012 03:18 AM

    அப்ப இவ்வளவுகாலமும் முஸ்லிம்களே கல்வியில் பெரும் வீழ்ச்சியில் இருந்தார்கள் என்பதை சொல்லாமல் சொல்கிறீர்கள்??? வீழ்ச்சியில் இருப்பவர்கள் சில நேரம் எழுச்சி அடைவது இயல்புதானே??? ஆனால் அந்த எழுச்சி அவர்களின் சனதொகை வீததிட்கு அமைய அடைவுமட்டத்தை அடையாதிருக்க தேவையற்ற புள்ளி விபரட்தைகாட்டி ஏன் இந்த உளரல்??? பல்கலைகழக மாணவர்தொகையில் முஸ்லிம்கள் அவர்களின் 10 வீதமான சனதொகைக்கு அமைய 10 வீதமான மாணவர் தொகையை பல்கலைகழகத்தில் கொண்டிருக்க வில்லை என்பதே எதார்தம் பல்கலைகழக நுளைவில் முஸ்லிம்கள் இன்னும் 5 வீதத்தை கூட பூர்த்தி செய்யவில்லை என்பதே எதார்தம்???

    Reply : 0       0

    krish Sunday, 23 December 2012 04:55 AM

    அந்த ஆண்டில் பல்கலைகழகங்களுக்கு தெரிவான மாணவர்களில் சிங்கள மாணவர்களில் 0.9 % தமிழ் மாணவர்களில் 0.2% வீழ்ச்சி ஏற்பட்டது. எனினும் முஸ்லிம் மாணவர்கள் தெரிவாவது அந்த ஆண்டில் மட்டும் 10.8 % அதிகரித்துள்ளது..... சும்மாவே எரியுது, இதுல எண்ண வேற ஊத்துங்க.

    Reply : 0       0

    mohammed Sunday, 23 December 2012 12:15 PM

    அமைச்சர் ரவூப் ஹக்கீம் இற்கு வீசப்பட்ட அதே கற்கள் இவருக்கும் வீசப் படாமல் இருந்தால்......... நல்லது.

    Reply : 0       0

    இவனும் ஓர் ஆசிரியர் Monday, 24 December 2012 07:22 AM

    "கிணற்றுத் தவளைகள் ஆற்றுத்தவளைகளாக மாற்றப்படுவது வரவேற்கத்தக்கது." ஒரு பாடசாலையில் கற்று அப்பாடசாலையில் ஆசிரியராக நியமனம் பெற்று அப்பாடசாலையில் தொடர்ச்சியாக இருந்து அங்கிருந்து ஓய்வுபெற்று சென்றவர்கள் உள்ள‌னர், செல்லவிருப்பவர்களும் உள்ள‌னர். இவர்கள் எத்தனைபேர் என்று கணக்கெடுக்கவும் முடியும். இவர்களை "கிணற்றுத் தவளைகள்" என்பதில் தவறில்லை. 10, 20 வருடங்களுக்கு மேலாக ஒரே பாடசாலையில் மட்டுமன்றி ஒரு கல்விக்கோட்டத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு கண்டிப்பாக இடமாற்றம் வழங்கப்படல் வேண்டும். இதில் அரசியல் வாதிகள் தலையிட்டு இடமாற்றத்தை தடுத்தால் அது அநீதியாகும். இவ்வநீதிகள் நாட்டுக்கும், கல்விதுறைக்கும், அவ்வூருக்கும் சாபத்தை ஏற்படுதும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. ஏனனில்,

    Reply : 0       0

    ஓர் ஆசிரியர் Con... Monday, 24 December 2012 07:23 AM

    சில ஆசிரியர்கள் மிக நீண்டகாலமாக அவர்களது சொந்த ஊரிலுள்ள பாடசாலைக்கு வரமுடியாமல் தூரப்பிரதேசத்தில் அதாவது, வெளியூரில், வெளிவலயத்தில், மாகாணங்களில் கடமையாற்றுகின்றனர். அதற்கு காரணம் குறித்த சில ஆசிரியர்கள் அவர்களது அந்த ஊரிலுள்ள பாடசாலையில் தொடர்ச்சியாக இருப்பதனாலாகும். எனவே, வெளியூரில் சேவையாற்றும் ஆசிரியர்கள் அவர்களது சொந்த ஊரிலுள்ள பாடசாலையில் கடமையாற்றுவதற்கு இந்த இடமாற்றம் ஒர் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .