2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

ரணிலின் 'மூளை' விசேடமானது: ராஜித்த

Kanagaraj   / 2012 டிசெம்பர் 23 , பி.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அழகன் கனகராஜ்)

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் நான் நீண்ட நாட்கள் அரசியல் செய்துள்ளேன் அவருடைய 'மூளை' விசேடமானது. என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை மன்றக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குற்றப்பிரேரணை தொடர்பில் பொதுநலவாய மாநாட்டிற்கு கடிதம் எழுதபோவதாக ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது. கட்சியை வெற்றிக்கொள்வதில், தேர்தலில் வெற்றியீட்டுவதற்கு அவருக்கு இருக்கும் ஆளுமை போதாது.

ஆனால், கடிதம் எழுதுவதில் அவருடைய மூளை விசேடமானது. பொதுநலவாய மாநாட்டிற்கு திகதியை மாற்றி  கடிதத்தையும் எழுதிவிட்டு கடிதம் எழுதப்போவதாக தற்போது தெரிவிக்கின்றனர்.

திகதியை மாற்றி கடிதம் எழுதுவதற்கு அவருடைய 'மூளையே' சிறந்தது என்றார்.

You May Also Like

  Comments - 0

  • Kumar Monday, 24 December 2012 01:30 AM

    ரணிலின் 'மூளை' மஹிந்த சிந்தனையில் உள்ளது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X