2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

'ஷெல் தாக்குதல்களுடன் இராணுவத்திற்கு தொடர்பில்லை'

Kanagaraj   / 2013 பெப்ரவரி 15 , மு.ப. 06:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஷெல் தாக்குதல்கள் இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்டவையல்ல என  இலங்கை இராணுவத்தின் நீதிமன்ற விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினால் இன்று கையளிக்கப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது ஷெல் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0

  • jegan Friday, 15 February 2013 01:18 PM

    ஒரே ஒரு ஷெல் தான் அடித்தோம் என்டாவது சொல்லியிருக்கலாமே

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .