2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

மாக்கர் பேனா குண்டு மீட்பு: இளைஞன் கைது

Kanagaraj   / 2013 பெப்ரவரி 18 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூடியை கழற்றும்போது வெடிக்கும் வகையில்  மாக்கர் வகை பேனாவினால் தயாரிக்கப்பட்ட குண்டு உட்பட பல்வேறு வெடிப்பொருட்களுடன் இளைஞர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்பிலிப்பிட்டிய, பனாமுர வலகொட பகுதியில் வைத்தே குறித்த இளைஞன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் உற்பத்தி செய்யப்படுகின்ற கைக்குண்டுகள் இரண்டு, 12 ரவைகளை கொண்ட துப்பாக்கி, 100 கிராம் சீ-4 வகை வெடிப்பொருள் உள்ளிட்ட வெடிப்பொருட்களும் அந்த இளைஞரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.

குறித்த இளைஞனின் வீட்டிலிருந்தே இந்த பொருட்கள் மீட்கப்பட்டதாகவும் அந்த பிரதேசத்திற்கு அடிக்கொரு தடவை சென்றுவருகின்ற பிரமுகரை இலக்கு வைத்தே இந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .